புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள அண்ணல் மகாத்மாகாந்தி சிலைக்கு கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் கழகத்தின் தலைவர் பேராசிரியர் மு.ராமதாஸ் தலைமையில் மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நித்தியானந்தன்,செல்வகுமாரி , சிவகுமாரன், சுப்ரமணியன், ஆண்டாள், சந்திரன், கௌரி, முருகன் ,பீட்டர், இதயசந்திரன் கலந்து கொண்டனர் 
Previous Post Next Post