கொமாரபாளையம் ஊராட்சியை , சத்தியமங்கலம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு - கொமாரபாளையம் பகுதியில் கடையடைப்பு..


 ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் நகராட்சியுடன்,கொமாரபாளையம் ஊராட்சியை இணைத்தால்,மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் பணிகள் பறிபோய்விடும் என்றும், இலவச வீடு, ஆடு, மாடு,கோழி, வழங்கும் திட்டம் ,மற்றும் மத்திய அரசு திட்டங்கள் ஏதும் ஊராட்சிக்கு வராது என்றும், வரி இனங்கள் பல மடங்கு அதிகரிக்கும், என்ற பொதுமக்களின் கோரிக்கை ஏற்று, சத்தியமங்கலம் நகராட்சியுடன் கொமாரபாளையம் ஊராட்சியை இணைத்த நகராட்சி தீர்மானத்தை கண்டித்தும், கொமாரபாளையம் ஊராட்சியை தொடர்ந்து ஊராட்சி யாகவே தொடர, வழிவகை செய்ய வேண்டி, தமிழக அரசு கவனம் கோரி, கிராம சபாவில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது, 


இதன் ஒரு பகுதியாக, கொமாரபாளையம் ஊராட்சி உரிமை பாதுகாப்பு குழுவின் அழைப்பினை ஏற்று, இன்று கொமாரபாளையம் ஊராட்சி பகுதி முழுவதும் வணிக பெருமக்கள் வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்கள் கடையடைப்பு செய்து, போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

Previous Post Next Post