தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் மாநில தலைவர் ஆவடி.ஸ்டாலினுக்கு தொடர் கொலை மிரட்டல் காவல் நிலையத்தில் புகார்

சென்னை ஆவடி முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் தமிழ்நாடு இந்து சேவா சங்கத்தின் மாநில தலைவர் ஆவடி.ஸ்டாலின் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் அதில் (15.10.2024) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப் மூலமாக வீடியோ கால் செய்து கத்தியை காட்டி கொலை செய்வதாக மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, தேசமும் தெய்வீககும் இரு கண்கள் என போற்றும் "தமிழ்நாடு இந்து சேவா சங்" அமைப்பின் மாநில தலைவராக கடந்த 20-வருட காலமாக சமூக நலப்பணி செய்து வருகிறேன். கடந்த இரண்டு நாடகளுக்கு முன்பு (15.10.2024) அன்று இரவு 9.00 மணியளவில் 9498498644 என்னுடைய போன் நம்பருக்கு வாட்ஸ் ஆப் மூலமாக 9597888158 என்ற எண்ணிலிருந்து வாட்ஸ்ஆப் மெசேஜ் வந்தது நான் யார் என்று பதில் கேட்டேன் அதற்கு அவன் வீடியோ கால் செய்து கத்தியை காட்டி உன்ளை கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விட்டான் நான் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன் அதே போல் தொடர்ந்து மறுநாள் (16.10.2024 ) இரவு 9.10 மணியளவில் மறுபடியும், அதே போல் மீண்டும் வீடியோ கால் செய்து கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மறுபடியும் மிரட்டல் விடுகிறான இதனால் நானும் எனது குடும்பமும் மன உலைச்சனுக்கு ஆளாகியுள்ளோம். ஆகையால் வாட்ஸப் மூலமாக கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் செய்த முகம் தெரியாத நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும், எனக்கு எனது குடும்பத்திற்கு தக்க பாதுகாப்பு வழங்கும் படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது மனுவில் தெரிவித்து உள்ளார் தமிழ்நாடு இந்து சேவா சங்க மாநில தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Previous Post Next Post