சேலத்தில் அக்கா தம்பி படுகொலை... விசாரணையில் திடுக்கிடும் தகவல்

சேலத்தில் அக்கா தம்பி இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா சித்ரா தம்பதி இவர்களுக்கு நவீன என்ற மகளும் சுகன் என்ற மகனும் உள்ளனர் மேலும் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நவீன பனிரெண்டாம் வகுப்பும் சுகன் 8 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். 

இந்த நிலையில் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இருவரும் தோட்டத்தில் பூப்பறிக்கச் சென்றபோது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த அவர்களது சித்தப்பா தனசேகர் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். அதைத்தொடர்ந்து குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ராஜா ஓடி வந்து பார்த்தபோது மகனும் மகளும் ரத்த வெள்ளத்தில்  கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து ராஜாவையும் தனசேகரன் வெட்டியுள்ளார் இதில் ராஜாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அக்கா தம்பி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வந்த உறவினர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பனமரத்துப்பட்டி காவல்துறையினர் உயிரிழந்த அக்கா தம்பி ஆகியோரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அத்துடன் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தனசேகரின் அப்பாவும் அண்ணன் தம்பிகள் எனவும் பங்காளி முறையில் உறவினரான ராஜாவிற்கும் தனசேகரனுக்கும் ஏராளமான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்துள்ளதாகவும் அதனால் ஆத்திரமடைந்த தனசேகரன் ராஜாவின் குழந்தைகளை கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது தற்போது கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தனசேகரை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர் இந்த படுகொலை சம்பவம் பனமரத்துப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post Next Post