எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக்க அனைவரும் அயராது உழைக்க வேண்டும்... தலைமை கழக பொறுப்பாளர் கே.ஆர்.அர்ச்சுணன் பேச்சு

அதிமுக உறுப்பினர் அடையாள அட்டையை அலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் ஆய்வு செய்து பின்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் K.R. அர்ஜுனன் உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிமுக புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சரும், பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை கழக பொறுப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.ஆர்.அர்ச்சுணன் பங்கேற்று உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார். இதைத்தொடர்ந்து கே.ஆர்.  அர்ஜுனன் பேசுகையில், எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக்க அனைவரும் அயராது உழைக்க வேண்டும். கழக நிர்வாகிகள் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது, அடையாள அட்டை இருந்தால் மட்டும் தான் தேர்தலில் போட்டியிட முடியும், பல்வேறு நலத்திட்டங்கள் உங்களுக்கு வந்து சேரும் என்று பேசினார். முன்னதாக அதிமுக வடிவங்களை வைத்து அலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் ஆய்வு மேற்கொண்ட பின்னரே உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இந்த நிகழ்வில் பகுதி கழக செயலாளர்கள் சுரேந்திரன், பழனிசாமி உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Previous Post Next Post