மயிலாடுதுறையில் முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் மறைவிற்கு முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தலைமையில் புகழஞ்சலி

*முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் மறைவிற்கு முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் தலைமையில் புகழஞ்சலி!* 

 முரசொலி நாளேட்டின் ஆசிரியர் திராவிடக் கொள்கை பெரும்பற்றாளர் முரசொலி செல்வம் மறைவடைந்ததையொட்டி மயிலாடுதுறையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திமுகழக மாநில விவசாய தொழிலாளர் அணி இணை அமைப்பாளர் ஜெக வீரபாண்டியன் தலைமையில் பொதுத் தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் முரசொலி செல்வத்தின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் மறைந்த முரசொலி செல்வத்தின் திராவிட இயக்க செயல்பாடுகள், நடவடிக்கைகள், சிந்தனைகள், முரசொலி நாளேட்டில் அவர் எழுதிய பல்வேறு கட்டுரைக்கள் குறித்து நினைவு கூர்ந்து பேசினார். நிகழ்வில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி, சீர்காழி நகர திமுக பொருளாளர் கோடங்குடி சங்கர், சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம், வள்ளாலகரம் நெல் குணசேகரன், சிவசங்கர், மண்ணம்பந்தல் ரவி உட்பட பலர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினார்கள்.
Previous Post Next Post