சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில், சதுமுகையில், அதிமுக 53 -ம் ஆண்டு துவக்க, கொடியேற்று விழா -


சத்தி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில், சதுமுகையில், அதிமுக 53 -ம் ஆண்டு துவக்க, கொடியேற்று விழா - மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ். எஸ். ஆறுமுகம் தலைமையில் நடந்தது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக, 53 ஆண்டு துவக்க, விழா கொடியேற்று விழா, அதிமுக சத்தி தெற்கு ஒன்றியம், சதுமுகையில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட, அம்மா பேரவை செயலாளர் எஸ். எஸ். ஆறுமுகம் தலைமையில், சத்தியமங்கலம் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் என். என். சிவராஜ் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக, சதுமுகை காலனி பகுதியில், ஒன்றிய செயலாளர் என்.சிவராஜ் கழக கொடியேற்றியும், சதுமுகை விநாயகர் கோவில் திடலில், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ். எஸ். ஆறுமுகம் கழக கொடியேற்றி, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். 


கொடியேற்று விழா நிகழ்ச்சியில், கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன்,சதுமுகை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆர். லோகநாதன், அதிமுக கட்சி நிர்வாகிகள் அதிகாரி பழனிசாமி, பாரின் ,பழனியப்பன்,சுப்பையன்,ஜி.கே. பழனிசாமி, செந்தில்குமார்,பழனிசாமி,ரஞ்சித் குமார், முருகேசன், ராஜேந்திரன், நாகராஜ், சந்திரா காளியண்ணன்,, முத்துச்சாமி மற்றும் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ் ,வளர்ச்சிக் குழு உறுப்பினர் ராசு என்கிற முனுசாமி மற்றும் அதிமுக கட்சி யினர், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் நெசவாளர் கூட்டுறவு சங்க நிர்வாகி கள், வார்டு கிளைச் செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 


முன்னதாக, சதுமுகை கிராம பிரிவிலிருந்து, அதிமுக கட்சியினர் திரண்டு ஊர்வலமாக சென்று,கொடியேற்று விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


 

Previous Post Next Post