திருப்பூர் மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்களில் கூட தனியார் பள்ளிகள் செயல்படுவதை கண்டித்து தமிழ்நாடு இந்து சேவா சங்கம் மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் புகார் மனு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக விதி மீறல்களில் ஈடுபட்டு அரசு விடுமுறை நாட்களில் கூட தனியார் பள்ளிகள் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு இந்து சேவா சங் மாநில இளைஞரணி தலைவர் நேதாஜி போர் படை அமைப்பாளர் சி.எஸ்.ஆனந்தராஜ் இந்து பரிவார் கூட்டமைப்பு முக்கிய பொறுப்பாளர்கள் இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று முறையிட்டு அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக செயலாளரிடம் தனியார் பள்ளிகளின் மனிதாபமற்ற செயலால் குழந்தைகள் அரசு விடுமுறை நாட்களில் கூட பள்ளிக்கு செல்ல வேண்டிய ஒரு அவல நிலையை குறித்து மனுவாக அவரிடம் வழங்கப்பட்டது உடனடியாக தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்கள் .மேலும் தனியார் பள்ளிகள் சட்டத்தை மீறும் பட்சத்தில் சட்டத்துக்கு உட்பட்டு மேற்கண்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து இருக்கின்றனர்.
Previous Post Next Post