சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில் நடைபெற்றது

சூலூர் காவல் நிலையத்தில் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமை தாங்கினார் இந்து இயக்கங்களான தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு இந்து அமைப்பை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஆலோசனை கூட்டத்தில் சென்றாண்டு போலவே இந்த ஆண்டும் விநாயகர் சதுத்தி விழா அமைதியாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது மேலும் சூலூர் சின்ன குளத்தில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு சூலூர் காவல் ஆய்வாளிடம் அனைத்து இந்து அமைப்பினர் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டது இதை பரிசீலனை செய்து முடிவு சொல்வதாக தெரிவித்துள்ளார் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிசத் மாநில இணை பொது செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார்,மாநகர் மாவட்ட இணை செயலாளர் கணேஷ், மாநகர் மாவட்ட இணை செயலாளர் நாகராஜ், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜ்குமார் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் மாணிக்கம் உட்பட பல்வேறு இந்து அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post