சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம் பேரூராட்சியில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா.



ஈரோடு வடக்கு மாவட்டம், அரியப்பம் பாளையம் பேரூர் திமுக சார்பில், திமுக பவளவிழா மற்றும் பேரறிஞர் அண்ணா  பிறந்தநாள் விழா, திமுக பேரூர் கழக செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ்.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.இதில் தி.மு.கழக மூத்த முன்னோடி,அரியப்பம்பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர்.ஈஸ்வரமூர்த்தி கொடியேற்றினார்.அதனை தொடர்ந்து, பேரூர் தி.மு.கழகச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.எஸ். செந்தில்நாதன் பவளவிழா மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாப் பேரூரையாற்றினார். இந் நிகழ்வில், பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், தி.மு.கழக மூத்த முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






Previous Post Next Post