கோவை சூலூர் பகுதியில் வீர இந்து சேவா சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் விசர்ஜன ஊர்வலம்

கோவை சூலூர் பகுதியில் வீர இந்து சேவா சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எட்டு விநாயகர் சிலைகள் வைத்து சூலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி வடக்கு மண்டல தலைவர் ரவிக்குமார்,சூலூர் நகரத் தலைவர் அசோக் , ஆன்மீக பிரிவுத் தலைவர் சத்தியநாராயணன், தேச பக்தர் பழனிச்சாமி , கண்ணம்பாளையம் பொறுப்பாளர் மணி, மற்றும் வீர இந்து சேவா மாநில தலைவர் கிருஷ்ணகுமார், வீர இந்து சேவா ஆன்மீக பிரிவுத் தலைவர் ஸ்ரீ ல ஸ்ரீ வடிவேல் சாமிகள், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்செல்வம்,கோவை மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் கோவை மாவட்ட செயலாளர் மாதவராஜ் ,கோவை மாவட்ட ஆன்மீக பிரிவுத் தலைவர் கிருஷ்ணசாமி (எ) ஜாக்கிசான்,கோவை மாவட்ட மகளிர் அணி தலைவி சுமதி, கண்ணம்பாளையம் தலைவர் குணா, கண்ணம்பாளையம் செயலாளர் மணி ஆகியோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடந்தது முடிவில் சூலூர் மற்றும் கண்ணம்பாளையம் பகுதிகள் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சென்று நொய்யல் ஆற்றில் விஜர்ஜனம் செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிறப்பாக ஒத்துழைப்பு அளித்த சூலூர் காவல் ஆய்வாளர் அவர்களுக்கும்,மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து காவல் துறை நண்பர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் வீர இந்து சேவா சார்பாக நன்றிகளை தெரிவித்து கொண்டனர்
Previous Post Next Post