கள்ளப்பாளையம் ஊராட்சி நிர்வாகம், கோயம்புத்தூர் கேன்சர் புவுண்டேஷன், கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை இணைந்து நடத்தும் பெண்களுக்கான பரிசோதனை முகாம்

கள்ளப்பாளையம் ஊராட்சி நிர்வாகம், கோயம்புத்தூர் கேன்சர் புவுண்டேஷன், கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை இணைந்து நடத்தும் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை 23/08/2024  அன்று கள்ளப்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது. 
வெளி மருத்துவமனைகளில் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஆறாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகும். இந்தப் பரிசோதனை 
கள்ளப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் முற்றிலும் இலவசமாக 
நடத்தப் பட்டது. கள்ளப்பாளையம், சின்னக்குயில் பாப்பம்பட்டி, பகுதிகளைச் சேர்ந்த 130 க்கும் மேற்பட்ட பயனாளிகள் இந்தப் பரிசோதனையை மேற்கொண்டு பயனடைந்தனர்.
 சமூக ஆர்வலர் பொன்.கார்த்திகேயன் மற்றும் கள்ளப்பாளையம் ஊராட்சியில் தொடர்ந்து 25ஆண்டுகாலமாக மக்கள் பிரதிநிதியாக இருந்துவரும்
ஒன்றாவது வார்டு சாதனை உறுப்பினர் 
கவிதா கார்த்திகேயன்
ஆகியோர் இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை முன்னின்று நடத்தினார்
Previous Post Next Post