சத்தியமங்கலம் புலிகள்காப்பகம், கேர்மாளம் வனப்பகுதியில் யானை தந்தம் கடத்தியவர் கைது. 2 யானை தந்தங்கள் பறிமுதல் ..




ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதிக்கு உட்பட்ட, கேர்மாளம் வனச்சரக பகுதியில், வனத்துறை ஊழியர்கள் மற்றும் மாவோயிஸ்ட், நக்சல் தடுப்பு குழுவினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், திங்களூர் ஊராட்சி, பாசக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த  பூச்சியப்பன் என்பவரின் மகன் துரைசாமி என்பவர் யானை தந்தத்தைகடத்திவரும்போது, அவரை கைதுசெய்து, அவரிடமிருந்து, ஒரு ஜோடி யானை தந்தத்தை கைப்பற்றி, விசாரணை செய்து வருவதாக, சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனரும் ஹாசனூர் வன கோட்ட, மாவட்ட வன அலுவலருமான சுதாகர் இ.வ.ப. தெரிவித்து உள்ளார்.




:

Previous Post Next Post