ஆர்எல்வி பேரவைக்கு ஆதி திராவிடர் நல அணி மாநில அமைப்பாளராக ரகோத்தமன் நியமனம் நிறுவனத்தலைவர் ஆர். எல் வெங்கட்டராமன் அறிவிப்பு

ஆர்எல்வி பேரவைக்கு ஆதி திராவிடர் நல அணி  மாநில அமைப்பாளராக ரகோத்தமன் நியமனம் நிறுவனத்தலைவர்  ஆர். எல் வெங்கட்டராமன் அறிவிப்பு 

புதுச்சேரி ஆர்எல்வி ஜனநாயக பேரவையின் பழைய மாநில கமிட்டி கலைக்கப்பட்டு புதிய மாநில கமிட்டியின் முதல் மற்றும் இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து ஏழு தொகுதி அமைப்பாளர்கள் , மாநில மகளிர் அணி , இளைஞர் அணி ,மாணவர் அணி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இப்பொழுது மாநில ஆதி திராவிடர் நல அணியின்  அமைப்பாளராக  ரகோத்தமன் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஏம்பலம் தொகுதியை பூர்வீகமாக கொண்ட ரகோத்தமன் கோர்காடு பகுதியில் வசித்து வருகிறார். பல வருடங்களாக ஆர்எல்வி பேரவையில் பயணித்து வரும் ரகோத்தமன் அவர்களின் பிறந்த நாள் பரிசாக  ஆதி திராவிட அணியின் மாநில அமைப்பாளராக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 
   மேலும் ரகோத்தமன் பிறந்தநாளை முன்னிட்டு மதியம்  கோர்க்காடு ராமலிங்க அடிகளார் சபையில் பூஜை செய்து ஆர்எல்வி பேரவையின் ஏம்பலம் தொகுதி அமைப்பாளர்  கோகுல் தலைமையில்  நிறுவனத்தலைவர் ஆர்.எல் வெங்கட்டராமன் 500 பேருக்கு அன்னதானம்  வழங்கினார்.
ரகோத்தமன் பிறந்தநாளை முன்னிட்டு அன்று மாலை மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் மு. ராமதாஸ் மற்றும் சேர்மன் ஆர். எல் வெங்கட்டராமன் ஆகியோர் நேரில் சென்று ரகோத்தமனை வாழ்த்தினர். அவர்களுடன் கழகத்தின் மாநில செயலாளர் சிவகுமாரன் , ராதாகிருஷ்ணன், சுப்ரமணியன். ஆண்டாள், சிவகுமார், கோமதி,கௌரி, சுலோச்சனா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post