வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.

திருப்பூரில் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி. 

திருப்பூர் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை நேரத்தில் கன மழை பெய்தது சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக திருப்பூர் மாநகராட்சி காங்கேயம் சாலை புதுப்பாளையம் பகுதியில் தாழ்வான இடங்களில் இடுப்பளவிற்கு மழை நீர் தேங்கியது மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளில் தங்க முடியாமல் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. 


திருப்பூர் ராயபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருந்த பொது மக்களுக்கு தனியார் சார்பில் இடம் ஒதுக்கப்பட்டு புதுப்பாளையம் பகுதியில் வீடு கட்டி வழங்கப்பட்டது. தற்பொழுது இந்த பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கும் நிலையில் வீடுகளும் இடிந்து விழும் அபாயமான சூழ்நிலை இருப்பதாகவும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்றி தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post Next Post