தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 2வது இடம் மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்


 தமிழகத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 2வது இடம் மேயர் ஜெகன் பெரியசாமி  பெருமிதம்


தூத்துக்குடியில் மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்து வருகிறது. இன்று மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமையில் முகாம் நடைபெற்றது. 


இதில் கலந்துகொண்ட மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது "தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி கடந்த 2023-24 ஆம் ஆண்டு சிறப்பான முறையில் பணியாற்றியதாகவும் சுகாதாரப் பணிகள், சாலை வசதிகள் சிறப்பாக செய்து கொடுக்கப்டப்டுள்ளது. இதனை பாராட்டும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தில் இரண்டாவது மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது.


நாளை சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்குகிறார். இவ்விருதை மேயர் ஆகிய நானும், ஆணையரும் இணைந்து பெற்றுக் கொள்கின்றனர்.

Previous Post Next Post