நிறைவு நிலையில் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி சீரமைப்பு பணி மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி பாராட்டு

நிறைவு நிலையில் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி சீரமைப்பு பணி மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி பாராட்டு! 

 மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியின் தெற்கு புறத்தில் கிழக்குப் பகுதியில் கடந்த மேமாத மத்தியில் பெய்த மழையினால் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. உடனடியாக கோரிக்கையை வைத்தவுடன் மாவட்ட ஆட்சியர் மகாபாரதம் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு பொதுப்பணி துறையின் சார்பில் புணரமைக்குமாறு உத்தரவிட்டார். அதனை எடுத்து பணிகள் துவக்கப்பட்டு தற்பொழுது நிறைவேறும் நிலையில் உள்ளது. கட்டிட தொழிலாளர்கள் அப்பணிகளை துரிதமாக மேற்கொண்டு வரும் தற்போதைய காட்சிகளே இவையாகும். விரைந்து நடவடிக்கைகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி அவர்களுக்கும் பொதுப்பணித்துறையினருக்கும் பத்திரிக்கை செய்தி ஊடகத்துறையினருக்கும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
Previous Post Next Post