ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி பகுதி ஊராட்சிகளில், நாளை சிறப்பு கிராமசபை கூட்டம்..


 அடித்தட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை எதிரொலிக்கும் கிராமசபை கூட்டங்கள் ஆண்டு தோறும் ஆறு முறை நடைபெறுவது வழக்கம், மேலும் கிராம வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்திட சிறப்பு கிராமசபை கூட்டங்களும்நடைபெறும்.அதேபோல், கலைஞரின் கனவு இல்ல திட்டம் 2024-25 மற்றும் அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்டு, பழுதடைந்த குடியிருப்புகள் பராமரிப்பு செய்தல் 2024 - 25 திட்டத்தின் கீழ், கிராம அளவிலான குழுக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியலை, கிராம சபையில் பொதுமக்களின் பார்வையில் வைத்து, ஒப்புதல் பெறுவதற்கான சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சி கள் மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சி கள் மற்றும் தாளவாடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.


Previous Post Next Post