சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு ISO 9001:2015 உலகதரச்சான்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் சிறப்புநிலை பேரூராட்சியின் சிறந்த நிர்வாகத்திறன், கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை மூலம் இயற்கை உரமாக்கல் மற்றும் தனியார் நிதி உதவியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றத்தொடர் நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்திவருவதினை ஆய்வுக்குட்படுத்தி ISO 9001:2015 உலகத்தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து சான்றிதழினை காண்பித்து வாழ்த்துகள் பெறப்பட்டது. இந்நிகழ்வில் சூலூர் பேரூராட்சி மன்றத்தலைவர் திருமதி.தேவி மன்னவன், சூலூர் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் சோலை.ப.கணேசு, கோயம்புத்தூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத்சிங், சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் அ.சதீஷ் குமார், சூலூர் பேரூராட்சி தலைமை எழுத்தர் பா.கோவிந்தராஜா உடனிருந்தனர்
Previous Post Next Post