கோவை கிராஸ்கட் சாலையில் சுமங்கலி ஜூவல்லர்ஸ் தனது மூன்றாவது கிளையை துவக்கியது

கோவை கிராஸ்கட் சாலையில்  சுமங்கலி ஜூவல்லர்ஸ் தனது  மூன்றாவது கிளையை துவக்கியது.. 

கோவையில் சுமார்  45 வருடங்கள் பாரம்பரியம் கொண்ட சுமங்கலி ஜூவல்லர்ஸ் கோவை மட்டுமின்றி திருப்பூர்,ஈரோடு,உதகை என பல்வேறு பகுதிகளை சேர்ந்த நகை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் ராஜ வீதி,கிராஸ் கட் சாலையில் ஏற்கனவே சுமங்கலி ஜூவல்லர்ஸ் இயங்கி வந்த நிலையில்,தற்போது கிராஸ்கட் சாலையில் மூன்று தளங்களை கொண்ட பிரம்மாண்ட தங்கம் மற்றும் வைர நகைகளுக்கான ஷோரூமை துவக்கியுள்ளது..முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த ஷோரூம் துவக்க விழா சுமங்கலி ஜூவல்லர்ஸ் இன் நிர்வாக இயக்குனர்கள் செந்தில் குமார் மற்றும் அஷ்யந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர்களது பெற்றோர் விஸ்வநாதன் மற்றும் கிரிஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.புதிய ஷோரூமில்  பாரம்பரிய டிசைன்கள் கொண்ட தங்கம் மற்றும் வைர நகைகள்,திருமணத்திற்கு தேவையான அனைத்து வகையான டிசைன்கள் கொண்ட நகைகள் மற்றும் ஆண்களுக்கு என பிரத்யேக பிரிவு என துவங்கப்பட்டுள்ளது..நகை வாங்க விரும்பும் பெண்களுக்கு திறப்பு விழா சலுகையும் வழங்கப்படுவதாக சுமங்கலி ஜூவல்லர் நிர்வாக இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்…
Previous Post Next Post