கோவை, பிச்சனூரில் உள்ள ஜே.சி.டி.பொறியியல் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து

ஜே.சி.டி.பொறியியல் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து.

 கோவை, பிச்சனூரில் உள்ள ஜே .சி. டி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் .இக்கல்லூரியின் சிறந்த உட் கட்டமைப்பு வசதிகள், உலகத் தரம் வாய்ந்த ஆய்வகங்கள் ,நல்ல தேர்ச்சி விகிதம் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானிய குழு 10 ஆண்டுகளுக்கான தன்னாட்சி அந்தஸ்தை தற்போது இக்கல்லூரிக்கு வழங்கி இருக்கிறது .இந்த அங்கீகாரம் ,தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ற இளம் பொறியாளர்களை உருவாக்கும் இக்கல்லூரியின் பணிகளுக்கு வலுவூட்டும் வகையில் அமைந்துள்ளது என கல்லூரி முதல்வர் முனைவர் சு மனோகரன் அவர்கள் தெரிவித்தார்.
Previous Post Next Post