திருப்பூர் பட்டயக்கணக்காளர்கள் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு... புதிய தலைவராக கே.சி.செந்தில்குமார் தேர்வு

இந்திய பட்டயக்கணக்காளர்கள் சங்கத்தின் திருப்பூர் கிளையின் நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. திருப்பூர் கிளை தலைவர் சரவணராஜா,  என்.சிவாச்சலம், சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கல்லூரி பேராசிரியர் செண்பாநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஏற்றுக்கொண்டனர்.


 தற்போதைய நிர்வாக குழு உறுப்பினர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வரவேற்று சிறப்பாக செயல்பட வாழ்த்தினர்.   என்.சிவாச்சலம் மற்றும் செண்பகநாதன் சிறப்பு விருந்தினர்களாக  பங்கேற்றனர். தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கே.ஜலபதி, தற்போதைய பிராந்திய குழு உறுப்பினர்கள் எஸ். ராஜேஷ் ஏ.வி.அருண் ஆகியோர் பங்கேற்று திருப்பூர் கிளையின் சிறப்பான செயல்பாடுகள் மற்றும் சென்ற ஆண்டின் தென்னிந்திய அளவிலான சிறப்பான கிளையாக திருப்பூர் கிளை தேர்வு செய்யப்பட்டது ஆகியவற்றை பாராட்டி பேசினார்கள்.

 இந்த விழாவில் கே.சி.செந்தில்குமார் புதிய தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் சோனியா குமாரி குப்தா துணை தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். செயலாளர் என்.தருண், பொருளாளர் எம்.கே.மூர்த்தி, எஸ்.ஐ.சி.ஏ.எஸ்.ஏ., சேர்மனாக கே.சரவணராஜா, நிர்வாக குழு உறுப்பினர்களாக எம்.பி.வரதராஜன், எஸ்.ராஜேஷ் ஆகியோரும் பொறுப்பேற்றுக்கொண்டனர். 

Previous Post Next Post