தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு

தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு ஒசூரில் நடந்தது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணை பொதுச் செயலாளர் மற்றும் மாவட்டத் தலைவர் கங்காதரன்  கோட்டசெயலாளர் நரசிம்மன்   மஞ்சுசுவாமி கோட்ட தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்:
1) திருச்சியில் மார்ச் 2 அன்று நடக்கும் மாநில பொதுக்குழு கூட்டத்தில்  500க்கும்  மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
2) ராயக்கோட்டை சாலையில் உள்ள சாலையோர மாட்டிறைச்சி கடைகள் அகற்றக்கோரி மகளிர் அணி தலைமையில் ஆர்ப்பாட்டம்.
3) ஐந்தாயிரம் தம்பதிகளுக்கு கலந்து கொள்ளும் சத்தியநாராயணன் பூஜை வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்.
4) ஒசூர் மாநகர  நகர பகுதிகளில்  புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
5) மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமாச்சாரி  இறந்ததற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 6)  கிருஷ்ணகிரியை தலைமை இடமாகக் கொண்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மேற்கு மாவட்டங்களாக உருவாக்கப்பட்டு மாவட்டநிர்வாகிகள ஒன்றிய  நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். செயற்குழுவில்  150 க்கும் மேற்பட்ட மாவட்ட ,மாநகர, ஒன்றிய,நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
Previous Post Next Post