கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தி அறிக்கை

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  செய்தி அறிக்கை

பள்ளிக் கல்வித் துறை மூலமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழுவின் பொறுப்புகள் மற்றும் அவர்களின் பங்களிப்பு குறித்த மாநாடானது
03.02.2024 அன்று பொள்ளாச்சி உடுமலை சாலையிலுள்ள டாக்டர் மகாலிங்கம்
பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை உறுப்பினர்-செயலர்
அவர்களும், மாநிலத் திட்ட இயக்ககத்திலிருந்து பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த
அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இம்மாநாட்டில் பள்ளி மேலாண்மைக் குழு
உறுப்பினர்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகள், பள்ளியில் நிறைவேற்றப்படும்
தீர்மானங்கள், அதன் செயலி பதிவேற்றங்கள், பள்ளி வயது குழந்தைகளைக் கண்டறிந்து
பள்ளியில் சேர்த்தல் மற்றும் பள்ளி இடைநிற்றலைத் தவிர்த்தல், பள்ளிக்குத் தேவையான
கட்டிடப் பணிகள் குறித்து விவாதித்தல், மாணவர்களுக்கு உயர்கல்வியைத் தொடர்பான
வழிகாட்டுதலை உறுதி செய்தல் போன்றவற்றைப் பற்றி மாநில பள்ளி மேலாண்மைக் குழு
கருத்தாளர்களைக் கொண்டு விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தனது செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்
Previous Post Next Post