வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக ஆதரவு என தமிழ் மாநில முஸ்லிம் லீக் அறிவிப்பு

கோவை வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக ஆதரவு என தமிழ் மாநில முஸ்லிம் லீக் அறிவிப்பு

       தமிழ் மாநில முஸ்லிம் லீக் கோவை மாவட்ட பொதுக்குழு கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.அதில் பாராளுமன்ற தேர்தல் குறித்து தீர்மானங்கள் சேக் தாவுத் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.
*பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சேக் தாவுத்:-*
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாகவும் கூட்டணி வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தளங்கள் மீதும் இஸ்லாமியர்களின் மசூதி மீது தாக்குதல் நடத்தப்படுவதையும் மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேசிய புலனாய் அமைப்பினர் மூலம் மத்திய அரசு இஸ்லாமியர்களை வஞ்சித்து வருவதாகவும் அதனை உடனடியாக மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மூன்று ஆண்டுகளில் நிர்வாகத்தின் குறிக்கும் சிறுபான்மை மக்களிடையே பாகுபாடு என்ற திமுக அரசின் பொய் பிரச்சாரத்தையும் வீடு வீடாக சென்று மக்களுக்கு பறப்புரை செய்வோம் என்று கூறினார்.
மேலும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் இரண்டு தொகுதிகள் கேட்க உள்ளதாக சேக் தாவுத் கூறினார்.
Previous Post Next Post