கோவைபுதூரில் குழந்தை இயேசு திருத்தல பெருவிழாவை கோவை மறை மாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் துவக்கி வைத்தார்

கோவைபுதூர் பகுதியில் உள்ள குழந்தை இயேசு திருத்தல பெருவிழாவை கோவை மறை மாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் துவக்கி வைத்தார்..

கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் குட்டி பெத்லேகம் என அழைக்கப்படும், அற்புத குழந்தை இயேசு திருத்தலம் அமைந்துள்ளது.இந்த ஆலயம்  புதுப்பிக்கப்பட்டு, திருத்தேர் பெருவிழா கடந்த 4 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவை முன்னிட்டு,கடந்த  நான்காம் தேதி முதல்,கூட்டுப்பாடல் திருப்பலி,மறையுரை என பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.விழாவை முன்னிட்டு காலை திருத்தல குருக்கள் திருப்பலி நடைபெற்றது.இதில் கோவை மறை மாவட்ட ஆயர் மேதகு தாமஸ் அக்குவினாஸ் தலைமையில்  ,கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது.இதில் கோவைபுதூர் உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை ஆண்டனி வினோத்,,உதவி பங்கு தந்தை ஜானி சகாயராஜ் ஆகியோர் செய்திருந்தனர்..
Previous Post Next Post