தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் மாநில இணை பொது செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் கண்டன அறிக்கை

தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் மாநில இணை பொது செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் கண்டன அறிக்கை

பல்லடத்தில் நேற்று இரவு தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளரை கடுமையாக கொலைவெறி நோக்கத்தோடு கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கேட்டுக் கொள்கிறேன் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து  ஆபத்தாகத்தான் உள்ளது என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூறிக்கொண்டு வந்த போது அரசு மறுத்தது ஆனால் தொடர்ந்து படுகொலைகள் தமிழ்நாட்டில் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது
 ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுஷனை கடித்த கதை என்ற தமிழ் பழமொழிக்கேற்ப தற்போது செய்தியாளர்களே கொலை வெறி தாக்குதலுக்கு ஆளாகின்றனர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்தில் உள்ளது  என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது மேலும் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான நேசபிரபு உடல் நலம் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல முருகப்பெருமானை வேண்டிக்கொள்கிறேன் என்று தமிழ்நாடு விஸ்வஹிந்து பரிசுத் சார்பாக மாநில இணை பொது செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார்  தனது அறிக்கையில் கூறியுள்ளார்
Previous Post Next Post