கோவையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி எலக்ட்ரிகல்ஸ் சார்பாக மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

கோவையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ அன்னபூரணி எலக்ட்ரிகல்ஸ் சார்பாக மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு முருக பெருமானின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் கோவை பிரசித்தி பெற்ற அருள்மிகு மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மருதமலை கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு கோயம்பத்தூர் ஶ்ரீ அன்னபூரணி எலக்ட்ரிகல்ஸ் சார்பாக காலை முதல் மாலை வரை அன்னதானதம் வழங்கப்பட்டது. வெண்பொங்கல் , கேசரி,கலந்த சாதம் ,மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் கந்த சஷ்டி புத்தகம், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது.
இதில் அன்னபூரணி உரிமையாளர் கே.எஸ் மாதவன் ,அன்னபூரணி மாதவன், எம்.கார்த்திக் , விஜயலக்ஷ்மி கார்த்திக் ,மற்றும் அவரது நண்பர்கள் ஐய்யபன் ,தீபக் ,கிருஷ்ணமூர்த்தி ,யுதிஸ், விஸ்வநாதன், சீனிவாசன், சந்திரமௌலி , ரமேஷ், நாராயணன் என அனைவரும் இணைந்து தைப்பூச விழா அன்னதானத்தை சிறப்பித்தனர்.
Previous Post Next Post