கோவை உப்பிலிபாளையம் ஆடீஸ் வீதியில் எஸ்.ஆர்.எம்.பி.ஆர். சிமென்ட்ஸ் புதிய டீலர்ஷிப் அலுவலக துவக்க விழா

கோவை உப்பிலிபாளையம் ஆடீஸ் வீதியில் எஸ்.ஆர்.எம்.பி.ஆர். சிமென்ட்ஸ் புதிய டீலர்ஷிப் அலுவலக துவக்க விழா நடைபெற்றது..

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம்.நிறுவனம் மருத்துவம்,கல்வி,என பல்வேறு துறைகளில்   முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.இந்நிலையில்  எஸ்.ஆர்.எம்.குழுமம்,கட்டிடம் மற்றும் பொறியியல் துறையில் கால்பதிக்கும் விதமாக,அண்மையில், எஸ்.ஆர்.எம்.பி.ஆர். சிமென்ட்ஸ் எனும் புதிய நிறுவனத்தை துவக்கி தமிழகம் முழுவதும் சிமெண்ட் விற்பனையை துவக்கி உள்ளது.இந்நிலையில் கோவையி்ல் தனது நூறாவது விற்பனை மையத்தை சித்தன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோவை உப்பிலிபாளையம் ஆடீஸ் வீதியில் துவக்கி உள்ளது..இளம் தொழில் முனைவோர்கள் இணைந்து துவங்கியுள்ள இதற்கான துவக்க விழா சித்தன் நிறுவனத்தின் பங்கு தாரர்கள் ராஜேஷ்,ரூபன் ராஜ்,பூபதி,சங்கர் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. , எஸ்.ஆர்.எம்.பி.ஆர்., சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஓம் பிரகாஷ்,டீலர்ஷிப் ஹெட் கீர்த்தனா கண்ணன்,ஆகியோர் கலந்து கொண்டு புதிய டீலர்ஷிப் அலுவலக மையத்தை திறந்து வைத்தனர்..தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, தலைமை செயல் அதிகாரி ஓம் பிரகாஷ்,எங்களது குழுமம் தொடர்ந்து இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும்,வேலை வாய்ப்புக்களை அதிகமாக்கும் விதமாக இந்த துறையில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர்,எங்களது சிமென்ட் மிகவும் தரமானதாகவும், குறைந்த விலையிலும் இருப்பதால்,தற்போது புதிய கட்டிடங்கள்,மருத்துவமனைகள் கட்ட அதிக அளவில் எங்களது நிறுவனத்தின் சிமெண்ட் பயன்படாடு அதிகரித்து வருவதாக தெரிவித்தார்..
Previous Post Next Post