காவல்துறை சார்பில், சத்தி சிக்கரசம்பாளையம் ஊராட்சி, பழங்குடியினர் கிராமத்தில் வனப் பொங்கல். சத்தி டிஎஸ்பி சரவணன் பரிசு வழங்கி சிறப்புரை.


 சத்தியமங்கலம் உட் கோட்ட காவல் துறை சார்பில், சிக்கரசம்பாளையம் ஊராட்சி மற்றும் கோவைநிழல்மைய த்துடன் இணைந்து *மலைவாழ் மக்க ளுடன் வனப் பொங்கல்* நிகழ்ச்சி ராமபயலூர் கலைஞர் நகர் மலையடி வாரத்தில்,  காவல் ஆய்வாளர் எஸ். முருகேசன் தலைமையில், சிக்கரசம் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.சும்பிரமணியன் மற்றும் நிழல் அமைப்பின் முருகன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராக சத்தி, உட் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் .M.S. சரவணன்  கலந்து கொண்டு, 42 குடும்பங்களை சேர்ந்த 120 நபர்களுக்கு தமிழர் திரு நாளாம் தைத் திரு நாள் பண்டிகை முன்னிட்டு புத்தாடை கள் வேஷ்டி சட்டை புடவை, சிறுவர்களுக்கான பேண்ட் சட்டை சிறுமிகளுக்கான உடைகள் மற்றும் குடுமபத்திற்கு தேவையான தலா 5 கிலோ அரிசி துவரம் பருப்பு, ஒரு கிலோ கடலை, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஒரு கிலோ ஆகியவை வழங்கியும், கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி, சிறுவர்களுக்கான சாக்கு பை ஓட்டம் சிறுமிகளுக்கான லெமன் ஸ்பூன் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி னர். அனைவருக்கும் அறுசுவையுடன் கூடிய அசைவ உணவு வழங்கி நிறை வாக கொண்டாடப்பட்டது. சத்தியமங் கலம் உட் கோட்ட காவல் துணை கண் காணிப்பாளர் சரவணன் மற்றும் நிழல்கள் மைய நிறுவனர்  முருகன் ஆகியோர் மலைப்பகுதியில் ஒட்டி யுள்ள பகுதிகளில் அந்நிய நபர்கள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர் கள் யாரேனும் வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், படிப்பின் முக்கிய த்துவத்தை வலியுறுத்தியும் பேசினர்.



Previous Post Next Post