பவானிசாகர் அருகே யானை மிதித்து கணவன் - மனைவி பரிதாப பலி!

 ஈரோடு மாவட்டம், பவானிசாகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாமுண்டி வனச்சரகத்தில் சிங்கமலை - வால்மொக்கை வனப்பகுதி உள்ளது. 

இந்த பகுதியில் பவானிசாகர் அருகே உள்ள கராச்சிக்கொரை, பூதிக்குப்பம்  பகுதியை சார்ந்த ராமசாமி மகன் நஞ்சன் (வயது 75),அவரது மனைவி துளசியம்மாள் (70) ஆகிய இருவரும் இன்று மாலை சுண்டைக்காய் பறிக்க சென்றுள்ளனர். 

அப்போது அங்கு வந்த காட்டு யானை இருவரையும் தாக்கி உள்ளது. இதில் யானை மிதித்ததில் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விளாமுண்டி வனத்துறை அதிகாரிகள் இறந்து போன இருவரின் உடல்களை சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Previous Post Next Post