*ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.மகுடேஸ்வரன் தலமையில் நடைபெற்றது *


 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.மகுடேஸ்வரன் தலமையில் நடைபெற்றது 

இக்கூட்டத்தில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு கெட்டிச்செவியூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டாம் எனவும் கிராம ஊராட்சியாகவே இருக்க வேண்டும் எனவும் 68 மனுக்கள் மூலம் 5759 பேர் கையொப்பம் இட்டு மனுக்கள் வழங்கியுள்ளார்கள் மேலும்இந்த கிராம சபையில் பேரூராட்சி வேண்டாம் என்று பொதுமக்கள் அளித்த விண்ணப்பம் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சி தலைவருக்கு அனுப்பபடும் என்று ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துக் கொண்டார் இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post