சூலூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
சூலூர்  வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஆர்.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பாக தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி சூலூரில் நடைபெற்றது. இதில் வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டதோடு அது குறித்த துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன பேரணியை மண்டல துணை  வட்டாட்சியர்  மணிகண்டன்  தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில்  வருவாய் ஆய்வாளர் கங்காராஜ், முதுநிலை வருவாய் ஆய்வாளர் திருமதி அம்பிகா, கிராம நிர்வாக அலுவலர் திருமதி சுஜி, சிறப்புத் துணைக் காவலர்  ரவி ஆகியோர்  கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியைக் கல்லூரி தேசிய மாணவர்ப்படை அலுவலர் கேப்டன் டாக்டர் தீபக் ரிஷாந்த் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
Previous Post Next Post