கோவை சூலூரில் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீபமேற்றி வழிபாடு

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நாடு முழுவதும் ராமநாமம் மற்றும் விளக்கேற்றி பிரார்த்தனை செய்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன இந்நிலையில் சூலூர் கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி தலைவர் ரவிக்குமார் வேண்டுகோளின்படி கோவை சூலூரில் மார்க்கெட் ரோட்டில் உள்ள வடக்கு மாரியம்மன் கோவிலில்  ஐநூத்தி எட்டு தீபங்கள் ஏற்றி ராமநாமம் பாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி சூலூர் கிழக்கு மண்டல துணைத் தலைவர் வெள்ளியங்கிரி கிழக்கு மண்டல மகளிர் அணி தலைவர் நந்தினி கிழக்கு மண்டல அரசு தொடர்பு துறை தலைவர் மாரிமுத்து உள்பட கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என திரளாக ராமநாம நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
Previous Post Next Post