கோவை மருதமலை தைப்பூச திருவிழா பக்தர்களுக்கு இரவு முழுக்க அன்னதானம் வழங்கிய அகில பாரத மக்கள் கட்சியினர்

கோவை மருதமலை தைப்பூச திருவிழா..வழியில் வரும் பக்தர்களுக்கு இரவு முழுக்க அன்னதானம் வழங்கிய  அகில பாரத மக்கள் கட்சியினர்..

கோவை மருதமலையில் அமைந்துள்ள ஏழாம்படை வீடு என அழைக்கப்படும் அருள்மிகு சுப்பிரமணிய திருக்கோவிலில் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதில் நேர்த்திகடன் செலுத்துவதற்காக, கோவை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும், காவடி ஏந்தியும் பாத யாத்திரையாக முருகனை வழிபட வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்... இந்நிலையில் இவ்வாறு வரும் பக்தர்களுக்கு அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர்  எஸ்.ராமநாதன் தலைமையில் வடவள்ளி  பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.அதன் படி இந்த ஆண்டு  அன்னதான விழா மருதமலை மெயின் ரோடு,முல்லை நகர் பகுதியில் நடைபெற்றது.இதில் , அகில பாரத மக்கள் கட்சியினர்  வாண வேடிக்கை பட்டாசுகள் வெடித்து வழி நெடுகிலும் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்..இதில் பக்தர்களுக்கு டிபன்,தேரீர்,ஹார்லிக்ஸ்,பூஸ்ட்,பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டன..முன்னதாக நடைபெற்ற அன்னதான துவக்க நிகழ்ச்சியில் ,இந்து இயக்கங்களின் முக்கிய பிரமுகர் பூரி கமல்,பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கோவை  ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் அகில பாரத மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் இளந்தென்றல் சிவா,மாவட்ட துணை தலைவர் சேகர்,மண்டல தலைவர் வீரம் வினோத்,இளைஞரணி தலைவர் சதீஷ்,மகளிர் அணி பொறுப்பாளர் நிவேதா,கன்னிகா பரமேஸ்வரி டிரஸ்ட் நிர்வாகி கண்ணன்,ஆம்புலன்ஸ் ராகவன்,கால் டாக்சி சிவா,செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
Previous Post Next Post