காதலியை கொன்று விட்டு வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்

 நர்சிங் 2ம் ஆண்டு கல்லூரி மாணவியை ஓட்டல் அறையில் வைத்து கழுத்தை நெறித்து கொன்ற காதலன் கைது. 

சென்னை குரோம்பேட்டை தனியார் விடுதியில் இன்று காலை 10 மணிக்கு கேரளாவை சேர்ந்த ஆஷிக்(20), என்ற நபரும், 2ம் ஆண்டு நர்சிங் படிக்கும் கல்லூரி மாணவி பவுசியா(20), இருவரும் அறை எடுத்தி தங்கியுள்ளனர். 

இருவரும் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அறையில் இருந்த போது காதலின் செல்போனை காதலி பார்த்த போது அதில் காதலன் பல பெண்களுடன் இருந்த வீடியோ இருந்ததால் அது குறித்து கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த காதலன் காதலியை தனது டி சர்ட்டால் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு வாட்சாப்பில் இருவரின் போட்டோவை ஸ்டேட்டஸாக வைத்து விட்டு கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

இதனை கண்ட அப்பெண்ணின் நண்பர்கள் நேரில் சென்று பார்த்து விட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் காவலர்கள் நேரில் சென்று அறையில் பார்த்த போது கல்லூரி மாணவி உயிரிழந்து கிடந்தார். 

பின்னர் செல்போன் சிக்னலை வைத்து காதலன் ஆஷிக்கை பல்லாவரத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். 

விசாரணையில் இருவரும் 5 வருடங்களாக காதலித்து வருவதாகவும், 16 வயதில் குழந்தை பிறந்து காப்பகத்தில் வளர்ந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், அவ்வப்போது அறை எடுத்து தங்குவது வழக்கம். இந்நிலையில் செல்போனில் பல பெண்களுடன் இருப்பதை பார்த்ததால் ஏற்பட்ட சண்டையில் கொலை செய்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

குரோம்பேட்டை காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்

Previous Post Next Post