கோவையில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு நேதாஜி இந்து மக்கள் இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, கோவை டாடாபாத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, நேதாஜி இந்து  மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பு அழைப்பாளர்  நிறுவனத் தலைவர் புல்லட் சேகர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர் எம்.பி பாலா தலைமை வகித்தார். மாநில பொறுப்பாளர் ராஜேஷ் கவுண்டர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில்  மாநகர் மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிம்பு சுரேஷ் , மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர் கவுதம், உடையாம்பாளையம் பகுதி இளைஞரணி தலைவர் ஹரி, சூலூர் தெற்கு ஒன்றிய தலைவர் சூலூர் நகர இளைஞரணி தலைவர் முருகேசன் நிர்வாகிகள் சைஜ்,  பிரதீப் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post