மிக்ஜாம் புயலால் கொட்டும் மழை... மிதக்கும் ஜி.எஸ்.டி.,சாலை

 புயலின் தாக்கத்தினால் மிதக்கும் ஜி.எஸ்.டி.சாலை கடல் போல் காட்சியளிக்கிறது. 

சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலையில் புயலின் தாக்கத்தினால் மழை பொழிவு அதிகரித்து கடல் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. 

வாகனங்கள் மூழ்கிவிடும் அளவில் மழை நீர் தேங்கி உள்ளது. சாலையில் நடுப்பகுதியில் வாகனங்கள் கடந்து செல்கின்றன 

அவசர தேவைக்கு வெளியில் செல்லும் மக்களும் மழை நீர் தேக்கத்தால் செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர். 

மழை தொடர்ந்து நீடித்து வருவதால் இன்னும் மழை நீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

ஜி.எஸ்.டி.சாலையை ஒட்டிய உட்புற தெருக்களிலும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. 

Previous Post Next Post