இடுப்பளவு தண்ணீரில் மிதக்கும் தாம்பரம் அரசு மருத்துவமனை

 புயலின் தாக்கத்தால் கொட்டிய மழை காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்தவவமனையில் இடுப்பளவு தண்ணீர். நோயாளிகள் முதல் தளத்திற்கு மாற்றம். 

சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் மிக்ஜாம் புயலில் தாக்கத்தினால் தொடர்ச்சியாக கன மழை காற்றுடன் பெய்து வருகிறது. 

இதனால் மருத்துவமனை நுழைவுவாயில் முதல் மருத்துவமனைக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அனைவரும் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 

அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் வருபவர்களும் மிகுந்த சிரமத்தை நிலை தான் உள்ளது.

மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Previous Post Next Post