சூலூர் அருகே இரு சக்கர வாகனம் திருட்டு இருவர் கைது

சூலூர் நீலாம்பூரில் வசித்து வருபவர் துரைராஜ்(23) 
 கல்லூரி மாணவர் கள்ளக்குறிச்சியை சார்ந்த  இவர் இங்கு தங்கி பணி செய்து வருகிறார்  இவருக்கு சொந்தமான TN15 MA 0722 என்ற பதிவெண் கொண்ட பஜாஜ் பல்சர் வாகனத்தில் வேலைக்கு சென்று வருவதாகவும்  வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு சம்பவத்தன்று  12.10.2023 - ம் தேதி இரவு 11.00 மணிக்கு வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு மறுநாள் காலை 06.00 மணிக்கு வீட்டிற்கு வெளியே வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை இதான் மதிப்பு 70000 ரூபாய் ஆகும் அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்காததால்  துரைராஜ்  சூலூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில் சூலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு திருப்பூரைச் சேர்ந்த முகேஷ் குமார் (22) மற்றும் அதே பகுதியை சார்ந்த இம்ரான்கான்(26) இருவரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Previous Post Next Post