வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீட்டுக்கு 1000 ரூபாய்... சொந்த பணத்தில் வாரி வழங்கிய சின்னத்திரை நடிகர் பாலா!

 சின்னத்திரை புகழ் நடிகர் பாலா அனகாபுத்தூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தல ஆயிரம் என இரண்டு லட்ச ரூபாய் வெள்ள நிவாரண உதவியாக தனது சொந்த பணத்தை மூலம் வழங்கி வருகிறார்

அவருடன் விஜய் டிவி பிக் பாஸ் புகழ் அமுதவாணன் உள்ளிட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையார் ஆற்றங்கரையோரம் மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து அவர்களது உடைமைகள் ஏராளமாக சேதமானது.

பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு  விஜய் டிவி ( கலக்க போவது யாரு) புகழ் , நடிகர் ,  சமூக சேவகருமான நடிகர் பாலா மற்றும் பிக் பாஸ் புகழ் அமுதவாணன் ஆகியோர்  வெள்ளத்தால் குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர்,  பம்மல் ,  அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிககப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1000 ரூபாய் என 200 குடும்பங்களுக்கு..  மொத்தம் 2,00,000 ஐ நடிகர் பாலா வழங்கினார்.

யாரிடம் நன்கொடை பெறாமல் தனது சொந்த பணத்தை நிவாரண உதவித் தொகையாக நடிகர் பாலா வழங்கி வருகிறார்

Previous Post Next Post