தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கோர்ட் உறுப்பினராக ஆ.சங்கர் பொறுப்பேற்பு.!


 தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கோர்ட் உறுப்பினராக ஆ.சங்கர் பொறுப்பேற்பு.!


துாத்துக்குடி:கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட் உறுப்பினராக இருந்த ஆ.சங்கர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கோர்ட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பொறுப்புத்தலைவராகவும் மற்றும் துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.


ஐ.நா.,சபையில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ளார். கடந்த 32 ஆண்டுகளாக நுகர்வோர் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளார். நுகர்வோர் ஊற்று, நுகர்வோரே உங்களுக்காக, நுகர்வோர் கையேடு,  ஆகிய நுால்களை எழுதியுள்ளார்.

Previous Post Next Post