மாநில அரசின் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது 'நெருப்புடன் விளையாடுவதை' போல - ஆளுனருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.!


 மாநில அரசின் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது 'நெருப்புடன் விளையாடுவதை' போல - ஆளுனருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.!


பஞ்சாப் மாநில அரசின் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது 'நெருப்புடன் விளையாடுவதை' போல என பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஒரு ஆளுநர் எப்படி முடக்கி வைக்க முடியும்? ஆளுநருக்கு இதுபோல அதிகாரங்களை கொடுத்தது யார்? சட்டசபை கூட்டத் தொடர் முடிந்துவிட்டது என்பதாலேயே மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமாட்டேன் என்பது எப்படி சரியாகும்? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் கடும் சாடல்.

Previous Post Next Post