*கலைஞரின் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் சார்பாக வரவேற்பு.*


 *கலைஞரின் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் சார்பாக வரவேற்பு.*


முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரின் பன்முக ஆற்றலையும் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும், காட்சிப்படுத்தும் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி தூத்துக்குடி மாநகர பகுதியான பூபாலராயர்புரம் வருவதாக கொடுக்கப்பட்ட தகவலின் படி அங்கு மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் சார்பாக, மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பிரவின் தலைமையில் திமுக இளைஞரணியினர் வரவேற்பு வழங்கிட காத்திருந்தனர்.


மழையின் காரணமாக பூபாலராயர்புரம் வருகை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கொட்டும் மழையில் பீச் ரோடு முத்துநகர் பூங்கா அருகில் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு இளைஞரணியினர் பிரவின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திக் கொண்டனர். இந்நிகழ்வில்

N. ராபிஸ்டன், மிதன்சன், ஸ்ரீதர், பவுள், டான் இசக்கி உள்ப்பட திமுக இளைஞரணியினர் பலர் கொட்டும் மழையில் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

Previous Post Next Post