விவசாய தோட்டத்தில் புகுந்த மழை நீரை வடிகால் வழியாக ஜெசிபி மூலம் வெளியேற்றிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள்..
வாழை விவசாயிகள் மகிழ்ச்சி.,
கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம்இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது
நம்பியூர் வெங்கமேடு புதூரில் போதிய வடிகால் வசதி இல்லாததால் புதுத்தோட்டம் பகுதி விவசாய பூமிக்குள் மழை நீர் தேங்கியது
புது தோட்டம் பகுதியில் மட்டும் சுமார் 15 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைத் தோட்டத்திற்குள் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாழைகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெங்கமேடு புதூர் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் விவசாய நிலத்திற்குள் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் மழை நீர் தேங்காதவாறு நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து அப்பகுதியில் வடிகால் கான்கிரீட் அமைத்து மழை நீர் தேங்காதவாறு வழி வகை செய்ய வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து தமிழ்நாடு நெடுஞ்சாலை துறைகோட்டப் பொறியாளர் ஜெயலட்சுமி மற்றும் உதவி கோட்ட பொறியாளர் விஜயலட்சுமி ஆலோசனைபடி உதவி
பொறியாளர் சந்தோஷ் மற்றும் விவசாயிகள் முன்னிலையில் ஜெசிபி இயந்திரம் மூலம் மழைநீர் முமுவதும் வெளியேற்றப்பட்டது.
செய்தியாளர்.எம்.மாரிச்சாமி 9080602161