கோவில்பட்டி அருகே உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரிப்பு - கட்டிடத்திற்க்கு சீல் வைத்த தாசில்தார்!


 கோவில்பட்டி அருகே உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரிப்பு - கட்டிடத்திற்க்கு சீல் வைத்த தாசில்தார்!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நக்கலன்முத்தன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரிக்கப்பட்டு வருவதாக வந்த புகாரை தொடர்ந்து நேற்று இரவு கோவில்பட்டி தாசில்தார் லெனின் தலைமையில் அதிகாரிகள் திடிரென சோதனை நடத்தியுள்ளனர். அப்போது இரு அறைகளில் 5 பெண்கள்,2 ஆண்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் எவ்வித அனுமதி இல்லாமல் ஜெயராஜ் என்பவர் பட்டாசு தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் லெனின் தலைமையிலான அதிகாரிகள் பட்டாசு தயாரிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Previous Post Next Post