தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பார்வையற்றோர் இல்லத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் புத்தாடைகள் வழங்கல்.!


 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
பார்வையற்றோர் இல்லத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் புத்தாடைகள் வழங்கல்.!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பார்வையற்றோருக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் வழங்கினார்.


தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் உள்ள முத்துநகர் பார்வையற்றோர் சமுதாய அறக்கட்டளையை சேர்ந்த பார்வையற்றோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் எம்.எல்.ஏ., இன்று நேரில் சென்று புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post