நான்கு மாத சம்பள பணம் கேட்டு ஒப்பாரி போராட்டம்


 ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்தில் உள்ள 10ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் நாடு முளுவதும் உள்ள தொழிலாளர்களுக்கும் கடந்த4மாதமாக கூலி வர வில்லை.

அ.இ.வி.தொ.சங்கம் மாநில மையம் சட்ட மன்ற உறுப்பினர்கள் தோழர்கள் எம்.சின்னதுரை நாகை மாலி ஆகியோர் மூலம் தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர் ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

நடவடிக்கை இல்லை எனவே தமிழகம் முழுவதும் சம்பளத்தை உடனே விடுவிக்க கேட்டு தமிழகத்தில் உள்ள மத்திய மாநில அரசு அலுவலகங்களில் முன்பு ஒப்பாரி போராட்டம் நடத்துவது என்ற முடிவில் அடிப்படையில் இன்று கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒப்பாரி போராட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா தலைவர் ஆர். அமிர்தலிங்கம் தலைமை வகித்தார்.

சங்கத்தின் மூத்த தோழர் ஆர்.சிவலிங்கம் துவக்கி வைத்தார். சங்கத்தின் மாவட்ட துனை செயலாளர் கே.பி.கனகவேல்.

சங்கத்தின் மாநில செயலாளர் கே.சண்முகவள்ளி ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள். இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

Previous Post Next Post