தூத்துக்குடி மாநகராட்சி :மழைநீர் தேங்கிய பகுதிகளில் பைக்கில் சென்ற மேயர்.!


 தூத்துக்குடி மாநகராட்சி :மழைநீர் தேங்கிய பகுதிகளில் பைக்கில் சென்ற மேயர்.!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் பைக்கில் சென்று மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்க்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு உடனடியாக அப்புறப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் நீர் தேங்கிய இடங்கள் பள்ளமான பகுதிகள் ஆகையால் வரும் நாட்களில் அங்கும் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். 


மேலும், மழைநீர் பாதித்த பகுதிகளில் மேயர், சாமனிய மக்களின் தொண்டராக பைக்கில் சென்று ஆய்வு செய்தார். இதனைப் பார்த்த மக்கள் மேயருக்கு பாராட்டு தெரிவித்தனர். 

ஆய்வின் போது திமுக பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் அந்தோணி மார்ஷலின், மாவட்ட சிறுபாண்மை அணியின் துணை அமைப்பாளர் அந்தோணி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்..

Previous Post Next Post