கோவில்பட்டி நகரில் பெய்த பலத்த மழை: ரயில்வே சுரங்கபாலத்தில் பயணிகளுடன் சிக்கிய தனியார் பேருந்து - பத்திரமாக மீட்ட தீயனைப்புத்துறை.!


 கோவில்பட்டி நகரில் பெய்த பலத்த மழை: 

ரயில்வே சுரங்கபாலத்தில் பயணிகளுடன் சிக்கிய தனியார் பேருந்து - பத்திரமாக மீட்ட தீயனைப்புத்துறை.!



கோவில்பட்டி நகரில் பெய்த பலத்த மழையின் காரணமாக இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கபாலத்தில் தேங்கிய நீரில் 

மதுரையில் இருந்து கோவில்பட்டி நோக்கி வந்த தனியார் பஸ் - 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சிக்கிக் கொண்டது.  தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலமாக பயணிகளை மீட்டனர். சம்பவ இடத்தை  கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின் ஆய்வு செய்து மழை நீரில் சிக்கிய வாகனங்களை மீட்க அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவிட்டார். பெரும் மழை காரணமாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தண்ணீரில் மிதந்தது.

Previous Post Next Post